தாம்பரம் மாநகர போலீசார் தீவிர கஞ்சா வேட்டை நடத்தி 101 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஒடிசாவைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர்.சென்னை தாம்பரம் காவல் ஆணையரகம். பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் இன்று 03.09.2025 காலை 8 மணியளவில் னர் தீவிரமாக கண்காணித்தனர். பெரும்பாக்கம், அரசங்கழனி ஏரிக்கரை அருகில் வாகன சோதனை நடத்தியதில் அங்கு 101 கிலோ கஞ்சாவுடன் ஒடிசாவைச் சேர்ந்த ஜெய் காரா (34), கமல் லைசன் கிலா (24) ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கஞ்சாவை இருவரும் ஒடிசா மாநிலத்தில் இருந்து வாங்கிவந்து பெரும்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு சில்லரை விற்பனைக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.