காவலர் குறை தீர் முகாம்: 42 புகார் மனுக்கள் மீது உட­னடி நட­வ­டிக்கை எடு­க்க கமி­ஷ­னர் அருண் உத்­த­ர­வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இன்று (27.05.2025) வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்‘‘ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் உதவி ஆணையாளர், 6 காவல் ஆய்வாளர்கள், 7 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 28 காவல் ஆளிநர்கள் என மொத்தம் 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்றார்.

இம்முகாமில் பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்களை பெற்று, இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் ஹரிகிரண் பிரசாத் (எஸ்டேட் மற்றும் நலன்), காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment