சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் வாரம் தோறும் புதன்கிழமை அன்று புகார் மனுக்களை நேரடியாகப் பெற்று அவற்றின் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு
வருகிறார். அதன்படி இன்று (03.09.2025) புதன்கிழமை காவல் ஆணையரகத்தில் புகார் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து 15 புகார் மனுக்களை ஆணையர் அருண் பெற்றார். அவற்றின் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த முகாமின் போது துணை ஆணையாளர் (தலைமையிடம்) கீதா உடன் இருந்தார்.