­போலி ஆவணம் மூலம் ரூ. 2 கோடி நிலத்தை அப­க­ரித்த நபர் கைது: சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்­கை

ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீ­சார் கைது செய்­துள்­ள­னர்.

சென்னை பால­வாக்­கத்தில், சேகர் என்பவருக்கு சொந்தமாக 2,400 சதுர அடிகள் கொண்ட சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள சொத்து உள்­ளது. இதனை சிலர் கூட்டுச் சேர்ந்து போலியான ஆவணங்கள் தயார் செய்து மோசடி செய்­து அப­க­ரித்­துள்­ள­னர். ­இதுகுறித்து கடந்த 19.10.2012 அன்று சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசில் புகார் அளிக்­கப்­பட்­ட­து. அது தொடர்­பாக போலீசார் விசாரணை நடத்­தினர். கடந்த 13 ஆண்­டு­க­ளாக நிலு­வையில் இருந்து வந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்­தினர். இதில் நில மோசடி நடந்­தி­ருப்­பது உண்மை என தெரி­ய­வந்­தது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா வழிகாட்டுதலின்படி தனிப்படை அமைக்கப்பட்டது. அத­னை­ய­டுத்து இந்த வழக்கில் தொடர்­பு­டைய சென்னை மத­னந்­த­பு­ரத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் @ தனசூரியா (50) என்­ப­வரை போலீசார் இன்று (03.09.2025) கைது செய்­த­னர். சுரேஷ்­குமார் மீது 25-க்கும் மேற்பட்ட நிலமோசடி மற்றும் வங்கி மோசடி வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்­ற­வா­ளி­களைப் பிடிக்க காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment