அக்னி துறையில் பற்றி எரியும் லஞ்சத் தீ!
‘அக்னி’ துறையில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் மேலதிகாரிக்கு தர வேண்டும் என்று சொல்லியே பெரிய அளவில் வசூலில் ஈடுபட்டு வருவதாக அங்கு பணிபுரியும் சிலரே டிஜிபி அலுவலக மேலிடத்துக்கு தகவல்களை சொல்லி புலம்பி வருகின்றார்களாம். ஆனால் அந்த பெண் அதிகாரியை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என்கின்றனர் விவரம் தெரிந்த காக்கிகள். ஏற்கனவே பணியில் ஒழுங்கீனம் காரணமாக இவரை துறையை விட்டே டிஸ்மிஸ் செய்து ப்ரியமான அதிகாரி கடும் நடவடிக்கை எடுத்தாராம்.
ப்ரியமான அதிகாரி இருந்தவரை இந்தப்பெண் அதிகாரி மீண்டும் துறைக்குள் வரவிடாமல் முட்டுக்கட்டை போட்டு வைத்திருந்தாராம். சுமார் 7 ஆண்டுகள் டிஸ்மிசில் இருந்த அந்த பெண் அதிகாரி முன்னாள் தலைமை அதிகாரி ஒருவரின் தயவால் 1 கோடி கரன்சி கொடுத்து மீண்டும் போஸ்டிங்கை பிடித்து உள்ளே நுழைந்துள்ளாராம். லஞ்சப் பணத்தில் பெரிய அளவில் சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படும் அந்த பெண் அதிகாரி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்றாலும் அங்கு பணிபுரியும் பெண் அதிகாரியின் புதல்வர் அந்த விவரங்களை மேலிடத்துக்கு செல்லாமல் பார்த்துக் கொள்கிறாராம்.
மேலும் கணவரைப் பிரிந்து வாழும் அந்தப் பெண் அதிகாரியின் தற்போதைய லிவிங் டூ கெதர் கணவரும் அக்னித்துறையில் பெரிய பதவியில் இருப்பதால் பெண்ணுக்கு எதிராக எந்தப் புகாரும் துறையின் மேலிடத்துக்கு செல்லாமல் பார்த்துக் கொள்கிறாராம். 7 ஆண்டுகள் டிஸ்மிசுக்கு பிறகு பெண் அதிகாரிக்கு போஸ்டிங் போட்ட போது குறிப்பிட்ட காலங்களுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு எதுவும் வழங்கப்படக் கூடாது என்ற உத்தரவு உள்ளதாம். அது தெரியாமல் தற்போது துறைக்கு புதிதாக வந்துள்ள நேர்மைக்குப் பெயர் போன பெண் இயக்குநர், ஊழல் பெண் அதிகாரியை தனது பர்சனல் அதிகாரியாக நியமிக்க முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே ஊழல் புகாரில் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட அந்தப் பெண் அதிகாரி தற்போது தலைமை இயக்குநருக்கு பிஎஸ்ஓ என்றால் தமிழ்நாடு அக்னித்துறை லஞ்ச, ஊழல் துறையாவதில் எந்த சந்தேகமுமில்லை என்று புலம்புகின்றார்களாம் அக்னி துறை காக்கிகள்.