மதுரையில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள த.வெ.க மாநில மாட்டில் 10 முதல் 15 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என கட்சித் தலைவர் விஜய் எதிர்பார்க்கிறார். கட்சி தொண்டர்களை நேரடியா சந்திக்கும் வகையில் தொண்டர்கள், ரசிகர்கள் கூட்டத்துக்குள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே போய் பார்க்க வேண்டும் என அதிரடி திட்டம் தீட்டி இருக்கிறாராம் விஜய்.

கட்சி தொடங்கி 2 ஆண்டுகளுக்குள் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அதிரடியாக முதல் பிரமாண்ட கூட்டத்தை கூட்டி ஆளும், எதிர்க்கட்சிகளை அதிர வைத்துள்ளார் கட்சி தலைவர் விஜய் என்று அந்தக் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டுள்ளனர். மொத்தம் 7 இடங்களில் இதே போல பொது கூட்டத்தை கூட்ட வேண்டும் என விஜய் அறிவித்துள்ளார்.
இரண்டாவது கூட்டம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரையில் 500 ஏக்கர் பரப்பளவுள்ள நடத்துவதற்கான பூமி பூஜையையும் போடப்பட்டுள்ளது. மதுரையில நடக்கப் போகும் இந்தப் பொதுக்கூட்டம் தங்களது கட்சிக்கே திருப்புமுனை கூட்டமா இருக்க வேண்டும் என விஜய் நினைக்கிறார். மும்பையைச் சேர்ந்த நிறுவனத்துக்கு சொந்தமான 500 ஏக்கர் இடத்தை தேர்வு செஞ்ச விஜய் இந்த இடத்துல குறைஞ்ச பட்சம் 10 லட்சத்துல இருந்து 15 லட்சம் வரைக்கும் தொண்டர்கள் கூடுகிற மாதிரி பிரமாண்டமான கூட்டமா இருக்க வேண்டும்.
தொண்டர்களுக்கு எதுவும் உடல் நிலை பாதிப்படைந்தால் உடனே சிகிச்சை அளிப்பதற்கு மதுரையில உள்ள பிரபல மருத்துவமனைகளுடன் பேசி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாம். மருத்துவமனையில் உள்ள 50 ஆம்புலன்சுகளையும் இந்த மாநாடு நடக்குற இடத்திலேயே எப்போதும் போதுமான மருத்துவ குழுவோடு தயாராக இருக்க வேண்டும். விஜய் பேசும் மேடை பிரமாண்டமாக இருப்பதோடு கட்சித் தொண்டர்கள் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் தெரிவது போல அமைக்கப்படவுள்ளததாம்
இதற்கு தேவையான பிரமாண்டமான லைட் வசதி செய்வதுடன், தன்னுடைய நிழல் பின்பக்கம் விழ முடியாத அளவுக்கு நவீனமான லைட் செட்டிங்குகள் செய்ய வேண்டும் என உத்தரவு போட்டுள்ளாராம். இந்த மேடை போடும் அசைன்மென்ட் பிரபல ஆர்ட் டைரக்டர் ஜெ.பி. கிருஷ்ணாவிடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
அத்துடன் பிரமாண்டமான கூட்டத்தில் வெளியில் இருந்து தான் வரும் போது தொண்டர்களை அருகில் இருந்து பார்க்கும் வகையில் 2 கிலோமீட்டர் தூரம் கூட்டத்துக்குள்ளயே நடந்து வரும் வகையில் தடுப்புகள் அமைக்கணும். இதனால தொண்டர்களை அருகில் இருந்து பார்ப்பதோடு அவர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்துவதற்கு வசதியாக இருக்க வேண்டும் என விஜய் உத்தரவு போட்டிருக்கிறாராம்.
இதனால் விஜய் உள்ளே நுழையும் போது தொண்டர்கள் போடும் விசில், கூச்சல் சத்தம் பல கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் கேட்டு ஒரு அதிர்வை ஏற்படுத்த வேண்டும். பக்கத்தில் தொண்டர்கள் பார்ப்பதால் ரொம்ப சந்தோசமாகி விடுவார்கள் என விஜய் திட்டம் போட்டு கொடுத்துள்ளாராம். கூட்டம் சேராதபடி ஆளும் கட்சி பல இடையூறுகளை செய்வார்கள். இதையும் தாண்டி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்திக் காட்டி வருகிற தேர்தலில் மக்கள் நம்ம பக்கம்தான் உள்ளனர் என்பதை எல்லா கட்சிகளுக்கும் நிரூபிச்சு காட்டணும்னும் உத்தரவு போட்டுள்ளாரம் தவெக தலைவர் விஜய். இதனால் எல்லா வேலைகளையும் செய்ய பல நூறு பேரை அழைத்துச் செல்ல ஆர்ட் டைரக்டர் உள்ளிட்டவங்க தயாராகி வருகின்றார்களாம். மதுரையை கையில் வைத்திருப்பதாக சொல்லும் அமைச்சர் மூர்த்திக்கு இது பெரிய சவாலாதான் இருக்கப் போகிறது என மதுரை மாவட்ட தா.வெ.க நிர்வாகிகள் கெத்தாக சொல்லிக் கொள்கின்றனர்.