வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி தற்போது டம்மி பதவியில் உள்ளார். நள்ளிரவு மது போதையில் தனது செல்போனில் இருந்து கிளு கிளு பலான மேசேஜ்களை வாட்ஸ்அப் மூலம் பெண் அதிகாரிகளுக்கு அனுப்பினாராம். அதனைக் கண்ட பெண் அதிகாரிகளில் ஒருவர் ஆத்திரமடைந்து, இது குறித்து ஆதாரத்துடன் டிஜிபியிடம் முறையிட அந்த ஐபிஎஸ் அதிகாரியை ‘இணைய’ காலில் பிடித்து செம்ம வாட்டு வாட்டி விட்டாராம் டிஜிபி. இந்த விஷயம் வெளியில் மெல்ல கசிந்து தமிழக காவல்துறையில் ஹாட் டாப்பிக்காக முனுமுனுக்கப்படுகிறதாம்.